Video : "இன்னும் பல சீசனுக்கு இந்த 'கேட்ச்' நின்னு பேசும் போல..." 'பவுண்டரி' லைனுக்கு அருகே 'சாகசம்' செய்து காட்டிய 'வீரர்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தற்போது மோதி வரும் நிலையில், மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

மும்பை அணி பேட்டிங் செய்த போது, ராஜஸ்தான் அணியின் கார்த்திக் தியாகி வீசிய பந்தை எதிர்கொண்ட இஷான் கிசான், பந்தை பவுண்டரிக்கு கணக்கு செய்து தூக்கி அடித்தார். பந்து பவுண்டரி லைனைக் கடக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், லைனுக்கு அருகே நின்று கொண்டிருந்த ஆர்ச்சர் மிகவும் அற்புதமாக ஒற்றைக் கை பயன்படுத்திக் கேட்ச் செய்தார். 





 

இதனைக் கண்ட ராஜஸ்தான் அணி வீரர்கள் ஒரு நிமிடம் உறைந்து போயினர். இந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியின் நிக்கோலஸ் பூரன் பவுண்டரி லைனுக்கு அருகே செய்த சிறப்பான ஃபீல்டிங், வேற லெவலில் வைரலான நிலையில் அதனைத் தொடர்ந்து இன்று ஆர்ச்சர் பிடித்த கேட்சும் அதிகமாக வைரலாகி வருகிறது. 







 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்