"அடேய், நீ time travel ஏதாச்சும் பண்ணிட்டு வந்தியா??"... மீண்டும் வைரலான பவுலரின் 'ட்வீட்'... ஆச்சரிய மோடில் 'ஐபிஎல்' ரசிகர்கள்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில் பஞ்சாப் அணியின்  தொடக்க ஆட்டக்காரர்களான ராகுல் மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோர் மிகவும் சிறப்பாக ஆடி வருகின்றனர்.

பஞ்சாப் அணியின் ஸ்கோர் 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 86 ரன்கள் எடுத்துள்ள நிலையில், ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்சர் பந்து வீசிய முதல் ஓவரின் முதல் மூன்று பந்துகளை ராகுல் பவுண்டரிக்கு ஓட விட்டார். இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஜோப்ரா ஆர்ச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் '444' என ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்தே ஜோப்ரா ஆர்சர் பல ஆண்டுகளுக்கு முன் செய்த ட்வீட்கள் அந்த உலக கோப்பை போட்டிகளில் ஒத்துப் போவதாக இருந்தது. இந்த ஐபிஎல் தொடரிலும் ஆர்ச்சரின் சில ட்வீட்கள் ஒன்றிப் போகின்றது.

இதனை கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். ஆர்ச்சரை ஆச்சரியமாக சிலர் பார்த்தாலும் மேலும் சிலர், அவர் பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளை வைத்து அந்த ட்வீட்களை ஆர்ச்சர் பகிர்ந்திருக்கலாம் எனவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 



 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்