‘தல’ தோனிக்கே பிடிச்சுப்போச்சா..? அப்போ CSK அணிக்கு ஒரு தமிழக வீரர் கிடைச்சாச்சா..?- வைரல் புகைப்படம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் மீது சிஎஸ்கே அணியின் பார்வை விழுந்துள்ளதா? என ட்விட்டரில் வைரலாக ஒரு கேள்வி எழுந்து வருகிறது. ‘தல’ தோனி ரசித்த அந்த நட்சத்திர வீரருக்கு சமுக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertising
>
Advertising

சையது முஸ்தக் அலி கோப்பை போட்டித் தொடரில் இன்று தமிழ்நாடு- கர்நாடகா இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணி வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றியது. தனது அதிரடியான பேட்டிங் மூலம் தமிழ்நாடு அணியை வெற்றிப் பெறச் செய்த ஷாருக்கான் தற்போது பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். கேப்டன் விஜய் சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணிக்கு கடைசி பந்தில் ஒரு சிக்ஸர் விளாசிக் கொடுத்து வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றித் தந்துள்ளார் ஷாருக்கான்.

25 வயதான ஷாருக்கான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஷாருக்கான் 5.25 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். தற்போது நடந்து முடிந்துள்ள சையது முஸ்தக் அலி கோப்பையை தமிழ்நாடு அணி தொடர்ச்சியாக 3-வது முறையாக வாங்குகிறது. இறுதிப் போட்டியில் 17-வது ஓவரில் களம் இறங்கிய ஷாருக்கான் அதிரடியாக கடைசி நிமிடம் வரையில் போராடி கடைசி பந்தில் ஒரு சிக்ஸ் விளாசி அணியை வெற்றிப் பெறச் செய்தார்.

இதன் மூலம் சிஎஸ்கே-வின் பார்வை ஷாருக்கான் மேல் விழுந்துள்ளதாகத் தெரிகிறது. ஷாருக்கான் விளையாடுவதை ‘தல’ தோனி டிவி-யில் பார்த்து ரசிக்கும்படி இருக்கும் புகைப்படத்தை சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். 2022 ஐபிஎல் ஏலம் நெருங்கும் வேளையில் சிஎஸ்கே வெளியிட்டுள்ள இந்த பாராட்டு ட்வீட் சிஎஸ்கே ரசிகர்களைக் குஷிபடுத்தி உள்ளது.

ட்விட்டர் முழுவதும் சிஎஸ்கே ரசிகர்கள் ஷாருக்கான் 2022 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே சார்பாகத் தான் விளையாடப் போகிறார் என கொண்டாடி வருகின்றனர். இன்னும் சிலர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழ்நாடு வீரர் விளையாடப் போகிறாரா? என்றும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

IPL, IPL 2022, SHARUKH KHAN, CSK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்