"இவரு களத்துல இருந்தாருன்னா.. 'டிவி'ய மட்டும் ஆஃப் பண்ணிடாதீங்க.." மெய்சிலிர்த்து போன 'இர்பான் பதான்'.. வைரலாகும் 'ட்வீட்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 14 ஆவது ஐபிஎல் சீசனில், இதுவரை 4 போட்டிகளில் ஆடியுள்ள நிலையில், அதில் 3 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது.

இதில், கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்றிருந்த போட்டியில், 18 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று சென்னை அணி அசத்தியிருந்தது. சென்னை அணி நிர்ணயித்த 221 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, ஆரம்பத்திலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருந்த போதும், மிடில் ஆர்டரில் ரசல், தினேஷ் கார்த்திக் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் அதிரடி காட்டியதால், வெற்றியை நெருங்கி வந்த கொல்கத்தா அணி, கடைசி ஓவரில் வெற்றியைக் கோட்டை விட்டது.

கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ரசல் (Russell), கடந்த ஐபிஎல் தொடரில் பெரிய அள்வில் ஜொலிக்கவில்லை. அதே போல, இந்த சீசனிலும் முதல் மூன்று போட்டிகளில், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத ரசல், சென்னை அணிக்கு எதிரான போட்டியில், தான் களமிறங்கியது முதலே சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை பறக்க விட்டார். மொத்தமாக ஃபார்ம் அவுட்டில் இருந்த ரசல், தற்போது மீண்டு வந்திருப்பதால், கொல்கத்தா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதனிடையே, ரசலின் ஆட்டத்தைப் பார்த்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் (Irfan Pathan), அவரைப் பாராட்டி ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார். அதில், 'ரசல் களத்தில் இருக்கிறார் என்றால், உங்களது தொலைக்காட்சியை நீங்கள் அணைக்க வேண்டாம்' என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

 

இர்பான் பதான் குறிப்பிட்டது போலவே, கைவிட்டுச் சென்ற போட்டியை, தனது அதிரடி ஆட்டத்தால் தங்கள் பக்கம் ரசல் கொண்டு வந்தார். இருந்த போதும், விக்கெட்டுகள் இல்லாத காரணத்தால், கொல்கத்தா அணி தோல்வியடைய நேரிட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்