"நான் அவங்க மேல அதிகாரம் செலுத்துறவன் இல்ல.." 'மனைவி'யின் புகைப்படத்தால் எழுந்த 'சர்ச்சை'.. ஆவேசமடைந்த இர்பான் 'பதான்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் (Irfan Pathan), சமூக வலைத்தளஙகளில் அதிகம் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.

பொது பிரச்சனைகள் குறித்து, தனது கருத்துக்களை இர்பான் பதான் அதிகம் தெரிவிக்கும் நிலையில், தனது மனைவி குறித்த விமர்சனம் ஒன்றிற்கும் அவர் தற்போது விளக்கமளித்துள்ளார். சவுதி அரேபியாவைச் சேர்ந்த 27 வயதான சஃபா பைக் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு, இர்பான் பதான் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு இம்ரான்கான் பதான் என்ற மகனும் உள்ளார்.

இந்நிலையில், அவரது மகனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இர்பான் பதான் தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தில், மனைவி சஃபாவின் முகம் மங்கலாக இருந்தது. இதனால், இர்பான் பதான் தான் அவரது மனைவியின் முகத்தை வெளிப்படுத்த அனுமதிக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.

 

இந்த சம்பவம், அதிகம் சர்ச்சைகளை கிளப்பியிருந்த நிலையில், தன் மீதான விமர்சனத்திற்கு, தனது ட்விட்டர் பக்கத்தில் இர்பான் பதான் விளக்கமளித்துள்ளார். அதே புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இர்பான், 'இதே புகைப்படம் தான், எனது மகனின் அக்கவுண்டில் இருந்து பகிரப்பட்டிருந்தது. இதற்காக, நாங்கள் அதிகம் வெறுப்புகளை சம்பாதிக்கிறோம். எனது மனைவியின் விருப்பப்படி தான், இந்த புகைப்படம் மங்கலாக வெளியிடப்பட்டது. நான் அவளுடைய துணை மட்டும் தான். மாறாக, அவளின் எஜமானன் அல்ல' என ஆவேசத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

 

தேவையே இல்லாமல், தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் விமர்சனம் வைத்தவர்களுக்கு இர்பான் பதான் கொடுத்துள்ள பதிலடி, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்