வேற வழியில்ல.. இனி ‘அவர’ தான் விளையாட வச்சாகணும்.. பொங்கி எழுந்த ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில்  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தோல்வியை தழுவியது.

ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டி இன்று (08.10.2020) துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 97 ரன்களும், வார்னர் 52 ரன்களும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடியது. ஆனால் 16.5 ஓவர்களில் 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பஞ்சாப் அணி இழந்தது. இதனால் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியை பொருத்தவரை நிக்கோலஸ் பூரன் அதிகபட்சமாக 77 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 7 ரன்னில் (12 பந்துகளில்) அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனால் பஞ்சாப் அணியின் முன்னணி வீரர் க்றிஸ் கெயிலை அடுத்த போட்டியில் விளையாட வைக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்