"சிலருக்கு மட்டும் வயசு வெறும் நம்பர் தான்... ஆனா இன்னும் சிலருக்கு?!!"... 'இவரா இப்படி பேசறாரு??'... 'அதிர்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ள டிவீட் ஒன்று சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து முதலில் ரெய்னா வெளியேறிய நிலையில், பின்னர் ஹர்பஜன் சிங்கும் வெளியேறினார். இருவரும் தனிப்பட்ட காரணங்களால் அணியிலிருந்து வெளியேறியதாக கூறப்பட்ட நிலையில், ரெய்னா மற்றும் ஹர்பஜன் இருவரின் ஒப்பந்தங்களையும் சிஎஸ்கே அணி நிர்வாகம் டெர்மினேட் செய்ய போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இவர்களுடைய ஒப்பந்தங்களை சிஎஸ்கே நீக்கினால் மொத்தமாக இவர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டு, வேறு அணியில் ஏலம் எடுக்கப்படலாம் எனக் கூறப்பட்டுகிறது.

இதற்கிடையே முந்தைய நாள் நடைபெற்ற சிஎஸ்கே போட்டிக்குப்பின் முன்னாள் வீரர் இர்பான் பதான் பகிர்ந்த டிவீட் ஒன்று தோனியை மறைமுகமாக விமர்சித்து பதியப்பட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. அந்த டிவீட்டில் இர்பான் பதான், "சிலருக்கு வயது என்பது வெறும் எண்தான். ஆனால் இன்னும் சிலருக்கு அது அணியில் இருந்து நீக்கப்படுவதற்கான காரணம்" எனக் கூறியுள்ளார்.

அதாவது தோனி போன்ற வீரர்கள் இந்த வயதில் கிரிக்கெட் விளையாடுகிறார்கள், ஆனால் என்னை எல்லாம் வயதை காரணம் காட்டி ஓய்வு பெற வைத்துவிட்டனர் எனக் கூறுவதுபோல மறைமுகமாக அவர் தோனியை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இர்பான் சொல்வது சரிதான் என ஹர்பஜன் ஒப்புக்கொண்டு டிவீட் செய்துள்ளது சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹர்பஜன் பதிவிட்டுள்ள டிவீட்டில் இர்பான் சொன்னதுடன் 10000000 சதவீதம் ஒத்துப்போகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்