ஒரே ‘ஒரு’ மேட்ச்ல தான் விளையாடுனாரு.. ஐபிஎல் தொடரில் இருந்து ‘பாதியிலேயே’ விலகிய வீரர்.. அணியை துரத்தும் சோகம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

காயம் காரணமாக டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து மற்றொரு வீரரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த ஷர்மா காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில், காயம் காரணமாக திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து அவர் விலகுவது டெல்லி அணிக்கு பெரும் நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார். அவருக்கு மாற்று வீரர் இன்னும் தேர்வு செய்யப்படாத நிலையில், இஷாந்த் ஷர்மாவும் ஐபிஎல் தொடரில் இருந்து பாதியில் விலகுவது டெல்லி அணிக்கு சிக்கலை உண்டாக்கியுள்ளது.

மேலும் டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் முன்னணி வீரர்கள் காயம் காரணமாக அடுத்தடுத்து விலகியதால் டெல்லி அணி என்ன செய்யபோகிறது? என கேள்வி எழுந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்