'முக்கிய வீரர்கள் காயமா???'... 'என்ன ஆச்சு இந்த டீமுக்கு?!!'... 'ரொம்பவே முக்கியமான போட்டியின் போது'... வந்த திடீர் குழப்பம்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நாளை நடக்கவுள்ள மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான போட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக உள்ள நிலையில், கடந்த வருடம் கோப்பையை வென்றதை தொடர்ந்து இந்த வருடமும் அந்த வெற்றியை தக்க வைக்க போராடிக்கொண்டு இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் வீரர்கள் இந்த முறை முழு பார்மில் உள்ளதுடன் அணிக்கு புதிதாக வந்திருக்கும் வீரர்களும் பெரிய அளவில் அணிக்கு வலிமை சேர்த்து வருகின்றனர்.

இதுவரை 9 போட்டிகளில் ஆடி இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி அதில் 6 போட்டிகளில் வென்றுள்ளது. ஆனால் தற்போது அவ்வளவு வலிமையான மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் முக்கியமான சில வீரர்கள் காயம் காரணமாக அவதிப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அணியில் இருக்கும் 3 முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக அவதிப்படுவதாக கூறப்படுகிறது. 

முக்கியமாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முழு பிட்னசில் இல்லாததுடன், அவருக்கு காலில் காயமும் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில முக்கியமான வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இதுவரை எதுவும் தகவல் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் தற்போது அந்த அணியின் டிவிட்டர் பக்கத்தில் எந்தெந்த வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது எனவும், அவர்களின் நிலை பற்றியும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இது ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், காயத்தால் நாளை ரோஹித் சர்மா விளையாடவில்லை என்றால் அணியின் கேப்டனாக பொல்லார்ட் செயல்படுவார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இது எந்த செய்தியும் உறுதிப்படுத்தப்படாததால் இந்த முக்கிய போட்டி பற்றிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்