நல்லா விளையாடிட்டு இருந்தவரையும் இப்டி ‘அவுட்’ பண்ணிட்டாரே.. ‘வறுத்தெடுக்கும்’ நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் கேதர் ஜாதவ்வை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அந்த அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் இளம் வீரர் பிரியம் கார்க் 26 பந்துகளில் 51 ரன்கள் அடித்து அசத்தினார்.

இந்த நிலையில் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. இதில் தொடக்க ஆட்டக்காரர் வாட்சன் 1 ரன்னில் அவுட்டானார். காயத்தில் இருந்து மீண்டு வந்த அம்பட்டி ராயுடு 8 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஆனாலும் மறுபுறம் டு ப்ளிஸிஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் 6-வது ஓவரில் கேதர் ஜாதவ் அடித்துவிட்டு ரன் ஓடும்போது எதிர்பாரதவிதமாக டு ப்ளிஸிஸ் ரன் அவுட்டானார். இதனைத்தொடர்ந்து 10 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து கேதர் ஜாதவ்வும் அவுட்டானார். இதனால் ஜாதவ்வை இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்