"நேத்து கெயில், ரஹானே... இன்னிக்கு இவரா???"... 'அடுத்தடுத்து தூக்கப்படும் முன்னணி வீரர்களால்.. ரசிகர்கள் அதிர்ச்சி'... 'RCB-யின் பிளான் இதுதானா?'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோத உள்ளன.

இன்றைய ஐபிஎல் போட்டியில் மோதவுள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஏற்கெனவே 15 முறை மோதியுள்ளன. அதில் பெங்களூரு அணி 6 முறையும், ஹைதராபாத் அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் இன்று விளையாட உள்ள ஆர்சிபி அணியின் உத்தேச லெவன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உத்தேச அணி

ஆரோன் பின்ச்
தேவ்தத் படிக்கல் \ பார்த்திவ் படேல்
விராட் கோலி
ஏபி டி வில்லியர்ஸ்
ஷிவம் துபே
மொயீன் அலி
கிறிஸ் மோரிஸ்
வாஷிங்டன் சுந்தர்
யுவேந்திர சாஹல்
நவதீப் சைனி
உமேஷ் யாதவ்

முன்னதாக நேற்று நடந்த  போட்டியில் பஞ்சாப் அணியில் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் இடம் பெறவில்லை. அதேபோல டெல்லி அணியில் இந்திய அணி வீரர் அஜின்க்யா ரஹானே சேர்க்கப்படவில்லை. இதுபோல முன்னணி வீரர்கள் தூக்கப்படுவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,     இன்று ஆர்சிபி அணியில் தொடக்க வீரராக ஆரோன் பின்ச்சுடன் பார்த்திவ் படேலுக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் விடையாடலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்