'சிக்ஸ் அடிக்கணும்னா பிட்ச்சுக்கு வெளிய அடிக்க வேண்டியதானே... வானத்தில தூக்கி அடிச்சா எப்படியா மேட்ச் நடத்துறது'?.. மேக்ஸ்வெல் சம்பவம்!.. அரண்டுபோன கோலி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பல வருடங்கள் கழித்து ஐபிஎல்லில் மீண்டும் ஃபார்மிற்கு வந்த மேக்ஸ்வெல்லின் ஆட்டத்தைப் பார்த்து ஆர்சிபி கேப்டன் கோலி அரண்டு போயுள்ளார்.

மும்பை அணிக்கு எதிராக இன்று பெங்களூர் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கொஞ்சம் சொதப்பினாலும், அடுத்தடுத்து பெங்களூர் அணி சுதாரித்து ஆட தொடங்கியது. பெங்களூர் மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டி சென்னையில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

இந்த போட்டியின் தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய மும்பை அணி போக போக பேட்டிங்கில் சொதப்பியது. முக்கியமாக டெத் ஓவர்களில் மும்பை அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது. 180+ ரன்களை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மும்பை அணி மோசமாக சொதப்பி 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மும்பை அணிக்கு எதிராக 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று பெங்களூர் அணி களமிறங்கியது. படிக்கல் இல்லாத காரணத்தால் இன்று பெங்களூர் அணியில் வாஷிங்டன் சுந்தர் இறங்கினார். ஆனால், ஓப்பனிங் இறங்கிய சுந்தர் பெரிய அளவில் அடிக்க முடியாமல் திணறினார். 

சுந்தர் 10 ரன்களுக்கு அவுட் ஆன நிலையில் அதன்பின் களமிறங்கிய படிடாரும் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அடுத்தடுத்து இரண்டு டாப் ஆர்டர் வீரர்கள் அவுட் ஆனது பெங்களூர் அணிக்கு அதிர்ச்சி அளித்தது. பெங்களூர் அணி இந்த தொடர் விக்கெட்டுகளை பார்த்து கொஞ்சம் பதற்றத்தில்தான் இருந்தது. முக்கியமாக கேப்டன் கோலி இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

ஆனால், அதன்பின் களமிறங்கிய மேக்ஸ்வெல் சிறப்பாக பேட்டிங் செய்தார். பொதுவாக வித்தியாசமான ஷாட் அடித்து மேக்ஸ்வெல் அவுட் ஆவார். நின்று நிதானமாக ஆடக்கூடியவராக இல்லாமல், அதிரடியாக ஆடுபவர். ஆனால் பெங்களூர் அணிக்காக ஆடும் முதல் போட்டியிலேயே மேக்ஸ்வெல் மிகவும் பொறுப்பாக ஆடினார். 

நல்ல ஷாட்களை தேர்வு செய்து, ரிஸ்க் எடுக்காமல், அடிக்க வேண்டிய பந்துகளை மட்டுமே அடித்தார். ஃபுல் லென்தில் வரும் பந்துகளை மட்டுமே அடித்தார். முன்பெல்லாம் மேக்ஸ்வெல் இப்படி ஆடியது இல்லை. இவரின் பொறுமையான ஆட்டத்தை கோலியே எதிர்பார்க்கவில்லை. ரோஹித்தும் இவரின் புதிய பாணி ஆட்டத்தை பார்த்து கொஞ்சம் ஆடிப்போனார். 

பெங்களூர் அணிக்காக கண்டிப்பாக மேக்ஸ்வெல் தனது பேட்டிங் ஸ்டைலை மாற்றி இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். தேவையான பந்துகளில் மட்டும் சிக்ஸ் அடித்து மற்ற பந்துகளில் இவர் நிதானம் காட்டினார். மேலும், அவர் அடித்த 100 மீட்டர் சிக்ஸைப் பார்த்து கோலி கொடுத்த ரியாக்சன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

கடந்த 2018 முதல் ஐபிஎல்லில் ஒரு சிக்ஸ் கூட அடிக்காத மேக்ஸ்வெல், இன்று முதல் போட்டியிலேயே சிக்ஸ் அடித்தார். மேக்ஸ்வெல் ஐபிஎல் போட்டிகளில் பல காலத்திற்கு பின் ஃபார்மிற்கு திரும்பி இருப்பது பெங்களூர் அணிக்கு பெரும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்