'13 வருஷ கனவு... இந்த முறை ரொம்ப நம்பிக்கையா இருக்கோம்!.. தட்டி தூக்குறோம் பாருங்க'!.. விராட் கோலியின் வியூகம் என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்த ஐபிஎல்லில் பெங்களூர் ஆர்சிபி அணியின் திட்டங்கள் குறித்து விராட் கோலி கருத்துகளை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2021 தொடர் துவங்க இன்னும் ஒரு வார காலமே உள்ளது. அடுத்த வெள்ளிக்கிழமை தொடர் துவங்கவுள்ளது. முதல் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது.

நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ஆர்சிபி அணியும் மோதுகின்றன. இந்நிலையில் இந்த சீசனை மிகவும் நம்பிக்கையுடன் எதிர்கொள்வதாக ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

  

இங்கிலாந்து தொடரையடுத்து கடந்த சில தினங்களாக ஓய்வு எடுத்துக்கொண்டு நேற்றைய தினம் மீண்டும் ஆக்ஷனில் இறங்கியுள்ளார் விராட் கோலி. அவர் நேற்றைய தினம் ஆர்சிபி அணியில் இணைந்து 7 நாட்கள் குவான்டைனை மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில், தற்போது ஆர்சிபி டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.   

கடந்த 13வது சீசன் யூஏஇயில் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் இந்தியாவில் நடத்தப்படவுள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளதாக அந்த வீடியோவில் விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்த சீசனை ஆர்சிபி அணி மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது நம்பிக்கையை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஐபிஎல்லுக்கு பிறகு பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளதாகவும் தற்போது ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் ஆடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கோப்பையை வெல்லும் நம்பிக்கை அணியில் தீவிரமாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்