'அஷ்வின்ணா உட்றாதீங்க ணா'!.. இந்த IPL-க்கு அப்புறம் அவரோட ரேஞ்சே வேற!.. ஒரே கல்லுல 3 மாங்கா!.. பரபரப்பு பின்னணி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2021 ஐபிஎல் தொடருக்கு பின் தமிழக வீரர் அஷ்வினின் கிரிக்கெட் கரியர் மொத்தமாக மாறிவிடும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

2021 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை நடக்க உள்ளது. நாளை பெங்களூர் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் முதல் போட்டி நடக்க உள்ளது. அதற்கு அடுத்து சென்னைக்கும் டெல்லிக்கும் இடையில் மேட்ச் நடக்க உள்ளது.

ரிஷாப் பண்ட் டெல்லி கேப்டனாக இருக்கும் இந்த போட்டி அதிக சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடர் அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையை புரட்டி போடும் என்கிறார்கள்.

தற்போது இந்திய டெஸ்ட் அணியில் அஷ்வின் மிக முக்கியமான வீரராக இருக்கிறார். பவுலிங்கில் சராசரியாக ஒவ்வொரு போட்டியிலும் இவர் 4 விக்கெட்டுகளை எடுக்கிறார்.  அதோடு தற்போது பேட்டிங்கிலும் அஷ்வின் கலக்கி வருகிறார். ஆனால், எவ்வளவு சிறப்பாக ஆடினாலும் அஷ்வின் இன்னும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆட தேர்வு செய்யப்படவில்லை.

தற்போது இந்திய அணியில் ஒருநாள், டி20 போட்டிகளில் ஸ்பின் பவுலின் செய்ய சுந்தர், சாஹல் ஆகியோர் மட்டுமே உள்ளனர். குல்தீப் யாதவ் பலமுறை வாய்ப்பு கொடுத்தும் சரியாக ஆடவில்லை.

இதனால் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடுவதன் மூலம் அஷ்வின் மீண்டும் குறைந்த ஓவர் போட்டிகளில் come back கொடுக்க முடியும். இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடுவதன் மூலம் அஸ்வின் மீண்டும் ஒருநாள் மட்டும் டி 20 போட்டிகளில் இந்திய அணியில் வாய்ப்பு பெற முடியும்.

இந்த ஐபிஎல் தொடர் மூலம் உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் இணைவதற்கான வாய்ப்பு அஷ்வினுக்கு கூடி வந்துள்ளது. அஷ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையை இந்த ஐபிஎல் கண்டிப்பாக புரட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் பண்ட் கேப்டனாக இருப்பதால் அஷ்வின் சிறப்பாக பவுலிங் செய்ய முடியும். 

இந்த ஐபிஎல் மூலம் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய அஷ்வின் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்காக அவர் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். டெஸ்ட் போட்டியில் கலக்கியது போல ஐபிஎல் தொடரிலும் அஷ்வின் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்