"அவர எப்டியாச்சும் 'டீம்'ல எடுங்க..." 'ஐபிஎல்' ஏலம் ஸ்டார்ட் ஆகும் முன்னரே... 'டிரெண்ட்' ஆகும் 'இளம்' வீரர்... "இன்னைக்கி அப்போ 'சம்பவம்' இருக்கு?!!"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இதற்கான ஏலம் இன்னும் சில மணி நேரயத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சென்னையில் வைத்து ஏலம் நடைபெறவுள்ளதையடுத்து, டேவிட் மலான், மேக்ஸ்வெல், ஆரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள், இன்று அதிக விலைக்கு போவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே நேரத்தில், இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரர்களான ஷாருக்கான், முகமது அசாருதீன் உள்ளிட்ட இளம் வீரர்கள் மீதும் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் ஏலத்தில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவர் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறார். 24 வயதேயான ஜெய் ரிச்சர்ட்சன், டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.


அது மட்டுமில்லாமல், சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக் பாஷ் லீக் தொடரிலும் பெர்த் அணிக்காக மிக அற்புதமாக ஆடி அசத்தியிருந்தார்.

இதனால், ஐபிஎல் தொடரிலும் இவர் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆகவே, அனைத்து அணிகளின் ரசிகர்களும் ஜெய் ரிச்சர்ட்சனை அணியில் எடுக்குமாறு சமூக வலைத்தளங்களில் அவரது பெயரை குறிப்பிட்டு தெரிவித்து வருகின்றனர்.

 












இளம் வீரர் ஒருவரை எடுக்க வலியுறுத்தி ரசிகர்கள் கமெண்ட் செய்து வரும் நிலையில், இன்றைய ஏலத்தில் ரிச்சர்ட்சனை  எடுக்க, ஐபிஎல் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறும் என தெரிகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்