'பழைய தோனியே இப்போ இருக்க தோனிய பாத்தா'... 'இததான் சொல்லிருப்பாரு?!!'... 'கண்டிப்பா அப்படி நடக்கும்'... 'அடித்து சொல்லும் பிரபல வீரர்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி பிளே ஆப் செல்லாமலேயே தொடரை விட்டு வெளியேறியுள்ளது.

ஐபிஎல் தொடரின் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் தமிழகம் தாண்டியும் அதிக ரசிகர்களை கொண்டது. ஐபிஎல் தொடங்கினாலே அந்த அணி மீதான எதிர்பார்ப்பு எப்போதும் உச்சத்திலேயே இருக்கும். அதற்கேற்ப அந்த அணியும் கடந்த சீசன் வரை அனைத்து ஆண்டிலும் பிளே ஆப் சென்ற ஒரே அணி என்ற பெருமையை பெற்றிருந்தது.

இந்நிலையிலேயே நடப்பு தொடரை மும்பைக்கு எதிரான வெற்றியுடன் தொடங்கிய சென்னை அணி அடுத்தடுத்து சொதப்பியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மோசமான ஆட்டத்தால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்குச் சென்ற சென்னை அணி முதலாவதாக பிளே ஆப் வாய்ப்பை இழந்து தொடரை விட்டும் வெளியேறியுள்ளது.   

இதைத்தொடர்ந்து சிஎஸ்கே வீரர்கள் மற்றும் தோனியின் ஆட்டம் குறித்தும், தோனியின் கேப்டன்சி குறித்தும்  கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் தொடர் சொதப்பலால் அடுத்த ஆண்டு அணியின் கேப்டனாக தோனி தொடர்வாரா என சந்தேகம் எழ, அதற்கு பதிலளித்து ஒய்வு குறித்த வதந்திகளுக்கு தோனி முற்றுப்புள்ளி வைத்தார். இதையடுத்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தோனி குறித்தும், அவருடைய பார்ம் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.

தோனி பற்றி பேசியுள்ள இர்பான் பதான், "2010-11ல் விளையாடிய தோனி, 2020ல் விளையாடும் இன்றைய தோனியை பார்த்தால் என்ன கூறுவார் என யோசித்தேன். அப்படி சந்திக்க நேர்ந்தால், அடுத்த ஆண்டு முழு உடற்தகுதியோடும், ஆட்டத்திறனோடும் திரும்பி வாருங்கள் என்றே கூறியிருப்பார். அதை தோனி செய்வார் என்பதும் உறுதி. அதுவே இப்போதுள்ள எதிர்பார்ப்பு" எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்