'என் பேர ஏன் இழுத்தீங்க?'... 'ஆர்சிபி போட்டியில்'... 'சர்ச்சை கமெண்ட் அடித்த கவாஸ்கர்'... 'விளாசித் தள்ளிய அனுஷ்கா!"...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விராட் கோலி - அனுஷ்கா சர்மா குறித்து ஆர்சிபி போட்டியில் கவாஸ்கர் கூறிய சர்ச்சை கமெண்ட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், அதில் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்ததுடன் அவர் 2 கேட்ச்சுகளையும் தவறவிட்டார். மேலும் விராட் கோலி ஒரு ரன் எடுத்து ஏமாற்றம் அளித்ததையடுத்து, போட்டி நடைபெற்று கொண்டிருக்கும்போது வர்ணனையாளராக செயல்பட்ட சுனில் கவாஸ்கர் அவரை விமர்சிக்கும் வகையில், "லாக்டவுன் காலத்தில் விராட் கோலி அவருடைய மனைவி அனுஷ்காவின் பந்து வீச்சை மட்டுமே எதிர்கொண்டுள்ளார்’’ எனக் கூறினார்.

தொடர்ந்து அனுஷ்கா சர்மா விராட் கோலியின் விளையாட்டையும், தன்னையும் தொடர்புபடுத்தி யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் எனத் தெரிவித்து வரும் நிலையில், சுனில் கவாஸ்கரின் இந்த சர்ச்சை கருத்திற்கு ரசிகர்களிடம் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து விராட் கோலியின் மனைவியின் அனுஷ்காவும் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.



இதுபற்றி அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ள பதிவில், "மிஸ்டர் கவாஸ்கர் உங்களுடைய கமெண்ட் மரியாதைக்குறைவானது. கிரிக்கெட் வீரர் ஒருவடைய ஆட்டத்திற்கு அவருடைய மனைவியை குற்றம் கூறியது ஏன்? என நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். நீங்கள் போட்டியில்  வர்ணனை செய்யும்போது ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை கொடுப்பீர்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அவர்களுக்கு இணையாக எனக்கு மற்றும் எங்களுக்கு நீங்கள்மரியாதை கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லையா?" எனப் பல கேள்விகளை கேட்டு விளாசியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்