‘இனி அதுக்கெல்லாம் அனுமதி கிடையாது’!.. நாடு முழுவதும் கொரோனா பரவல் எதிரொலி.. ஐபிஎல் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஐபிஎல் வீர்ரகள் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
14-வது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை 22 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. கொரோனா பரவல் காரணமாக குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே போட்டிகள் நடைபெற்று வருகின்றது. முதல் பாதி போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மற்றும் மும்பை வான்கடே மைதானங்களில் மாறிமாறி நடைபெற்றன. இந்த நிலையில் மீதி இருக்கும் போட்டிகள் டெல்லி மற்றும் அகமதாபாத் மைதானங்களில் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இது ஐபிஎல் தொடரில் வீரர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் சமீபத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்த தமிழக வீரர் அஸ்வின், ஐபிஎல் தொடரில் இருந்து பாதியில் விலகியுள்ளார்.
அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்டசன், ஆண்ட்ரூ டை உள்ளிட்ட வீரர்கள் நாடு திரும்பும் முடிவை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் வீரர்களின் பாதுகாப்பு கருதி பிசிசிஐ சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வீரர்கள் வெளியில் உணவு ஆர்டர் செய்து உண்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் வீரர்கள் விரும்பும் உணவை, அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களிலேயே தயார் செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் லிப்ட் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் மேதம் மாதம் 1ம் தேதி முதல் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது தடுப்பூசி செலுத்த விருப்பம் தெரிவிக்கும் வீரர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: ‘ரூல்ஸ்படி நீங்க அப்படி பண்ணுனது தப்பு’!.. சட்டென பவுலிங்கை நிறுத்தி ‘வார்னிங்’ கொடுத்த அம்பயர்..!
- ‘ஒரே ஒரு ரன்ல மிஸ் ஆகிடுச்சே’!.. ‘கடைசி பந்துல நீங்க அதை பண்ணிருக்கலாமே?’.. ரிஷப் பந்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!
- நீங்க சாதாரண விக்கெட்லாம் எடுக்க மாட்டீங்களா?.. எடுத்தா பெரிய ஆளுக விக்கெட்டு தானா?.. கோலியை காலி செய்த இளம் வீரரின்... மாஸ் பின்னணி!!
- ஒன்னுக்கு ஒன்னு சளைச்சதில்ல... பவுலர்ஸ திணறடிக்கும்... இவங்க ரெண்டு பேரையும் ஆர்சிபியில் கோச் பண்றது யாரு?.. லீக்கான டாப் சீக்ரெட்!
- 'வீராப்பாக கிளம்பி வந்துட்டு... இப்படி வசமா மாட்டிகிட்டோமே'!.. பரிதாபமான நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள்!.. என்ன செய்யப்போகிறது பிசிசிஐ?
- 'அடிச்சாரு பாருய்யா சிக்ஸர்'!.. சொந்த ஊருக்கு திரும்பும் குழப்பத்தில் வெளிநாட்டு வீரர்கள்!.. கிறிஸ் லின் போட்டுக்கொடுத்த சூப்பர் ப்ளான்!
- வெளிநாட்டு வீரர்கள் ஏன் விலகிட்டே இருங்காங்க..? என்ன காரணம்..? ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஓபன் டாக்..!
- 'சொல்லவும் முடியல... மெல்லவும் முடியல... குமுறும் வெளிநாட்டு வீரர்கள்'!.. ஐபிஎல் நடக்குமா?.. நடக்காதா?.. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!
- ‘இந்த வருசம் அதை பண்ண வேண்டாம்’!.. ‘இப்போ இருக்குறதே போதும்’.. ஸ்ட்ரிக்டா ‘நோ’ சொன்ன தோனி..!
- 'டாக்டர் எப்படி அந்த வார்த்தையை சொல்லலாம்'... 'பேசிக்கொண்டிருக்கும் போதே பளார் விட்ட பெண் செவிலியர்'... வைரலாகும் வீடியோ!