"எனக்கு தெரிஞ்சு இந்தியாவுல".. ‘ஐபில் அணி’ நிர்வாகம் பகிர்ந்த புகைப்படத்துக்கு ‘ஒரு படிமேலே போய்’ ரசிகர் கொடுத்த ‘வைரல்’ கமெண்ட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நாளை அபுதாபியில் ஐபிஎல்லின் 50வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

கடந்த 43வது ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை பஞ்சாப் அணி வெற்றி கொண்டதை தொடர்ந்து ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது. ஆரம்பத்தில் அதிக வெற்றிகளை குவிக்காத பஞ்சாப் அணி, தற்போது பெற்று வரும் தொடர் வெற்றிகளால், அந்த அணி பிளே-ஆப் பந்தயத்தின் முக்கிய 4 இடங்களில் உள்ளது. 

இந்நிலையில் பஞ்சாப் அணியின் பீல்டிங் கோச் ஜான்டி ரோட்ஸ், செய்த யோகாசன புகைப்படம், அந்த அணியின் அதிகாரப்பூர் டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 

குத்துக்கால் போட்டு அவர் செய்துள்ள அந்த யோகாசன புகைப்படம் ரசிகர்களின் பல்வேறு கமெண்ட்டுகளை பெற்றுள்ளது.

அத்துடன் ரசிகர் ஒருவர் ஒருபடி மேலேபோய், இந்தியாவில் காலை நேரத்தில் இந்த ஆசனம் செய்யப்பட்டு வருவதாக குறும்புத் தனமாக கமெண்ட் பண்ணியுள்ளார்.

இதுவரை ஆடிய 12 போட்டிகளில் வென்றுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பிளே-ஆப் கனவு, அடுத்து ஆடவுள்ள 2 போட்டிகளில் வென்றால் மட்டுமே நனவாகும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்