கோடி ரூபா குடுத்தாலும் கெடைக்காது! ஒரே போட்டியில் 'நிகழ்ந்த' சூப்பர் மேஜிக்... என்னன்னு பாருங்க!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று நடைபெற்ற பெங்களூர்-ஹைதராபாத் அணி இடையிலான போட்டியில் பெங்களூர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து அந்த அணி வீரர்கள் செம உற்சாகத்தில் இருக்கின்றனர். பீல்டிங், பவுலிங் என சொதப்பினாலும் ஹைதராபாத் அணியில் வலுவான பேட்டிங் அடித்தளம் இல்லாததால் பெங்களூர் அணி போட்டியில் சூப்பர் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியை அடுத்து பெங்களூர் அணி 2 புள்ளிகளை பெற்று பாயிண்ட் டேபிளில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் சென்னை அணி உள்ளது. 3-வது இடத்தில் டெல்லி அணியும், 4-வது இடத்தில் பஞ்சாப் அணியும் உள்ளன. ஒரே போட்டியில் பெங்களூர் அணி உச்சம் தொட்டதை எண்ணி ரசிகர்கள் குதூகலம் அடைந்துள்ளனர்.

இதே போல அடுத்தடுத்து வெற்றிகளை ஈட்டும் பட்சத்தில் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றில் நுழைந்து கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்வாரா விராட்? பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்