மேட்ச் 'வின்னர' ஏன் எடுக்கல?... கேப்டன் எடுத்த 'திடீர்' முடிவுக்கு காரணம் என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சார்ஜாவில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டுள்ளது. டாஸ் வென்ற கேப்டன் தோனி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி சென்னை அணி தற்போது பந்துவீச, ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் சொற்ப ரன்களிலேயே அவுட் ஆக, அடுத்து வந்த சஞ்சு சாம்சன் வெளுத்து வாங்கி விட்டார். அதிரடியாக ஆடிய அவர் 32 பந்துகளில் 74 ரன்கள் ரன்கள் குவித்தார். படாத பாடுபட்டு சென்னை அணி அவரை அவுட் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த போட்டியில் அதிரடியாக ஆடி வெரைட்டி காட்டிய அம்பாதி ராயுடு இந்த போட்டியில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ருத்ராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டு இருக்கிறார். பயிற்சி ஆட்டத்தில் ருத்ராஜ் நன்றாக ஆடியதால் அவருக்கு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு தோனி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தோனியின் இந்த முடிவு அவருக்கு வெற்றியை தேடித்தருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்