Video: 'அடிச்சா' அப்டித்தான் அடிப்பேன்... சூப்பர் 'சிக்ஸ்' அடித்து... தெறிக்க விட்ட கேப்டன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா-இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று புனேவில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 2-வதாக பேட்டிங் செய்த இலங்கை அணி 123 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

அதிகபட்சமாக இலங்கை அணியில் டி சில்வா 57 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணி இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.

முன்னதாக இந்திய அணி பேட்டிங் செய்தபோது போட்டியின் 17-வது ஓவரை மேத்யூஸ் வீசினார். அதனை எதிர்கொண்ட கேப்டன் கோலி அந்த பந்தை ஸ்ட்ரெயிட்டாக சிக்ஸ் அடித்து பறக்க விட்டார். இதைக்கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் செம ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவிவருகிறது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்