'அணியிலிருந்து வெளியேறும் முக்கிய வீரர்!!!... 'மாற்றுவீரராக களமிறங்கப்போவது இவர்தானா???'... 'வெளியான எதிர்பார்ப்பை எகிறவைக்கும் தகவல்?!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அடுத்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி குறித்து எதிர்பார்ப்பை அதிகரிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷமி, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார் என முக்கிய வீரர்கள் பலர் இன்றியே ஆஸ்திரேலியாவை அவர்கள் மண்ணிலேயே இந்தியா வீழ்த்தி அசத்தியுள்ளது. இருப்பினும் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில்  இந்திய வீரர் உமேஷ் யாதவ் பீல்டிங் செய்து கொண்டு இருந்த போது காலில் காயம் ஏற்பட்டு பாதியிலேயே வெளியேறினார்.

இந்நிலையில் உமேஷ் யாதவிற்கு தற்போது ஸ்கேன் செய்யப்பட்டதில், அவருக்கு காலில் எலும்பு பகுதியிலும், தசை பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து உமேஷ் யாதவ் டெஸ்ட் தொடரில் மீதம் இருக்கும் போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் உமேஷ் யாதாவிற்கு மாற்று வீரராக தற்போது தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்திய ஒருநாள் அணியில் சைனி காயம் காரணமாக உள்ளே வந்த நடராஜன், அதேபோல வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக டி 20 அணிக்குள் வந்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது இந்திய டெஸ்ட் அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் போட்டியில் விளையாடும் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா அல்லது சைனிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியாத நிலையில், நடராஜன் வலைப்பயிற்சியில் சிறப்பாக பந்து வீசி வருவதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனவே கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்