ஓவர் நைட்டில் வைரலான ‘காதல் ஜோடி’.. எப்படி இந்த ‘மேஜிக்’ நடந்துச்சு..? இந்திய ரசிகர் சொன்ன பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியின் போது மைதானத்தில் காதலியிடம் தனது காதலை வெளிப்படுத்தியது குறித்து இந்திய ரசிகர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் 2-வது ஒருநாள் கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி நடைபெற்றது. போட்டி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்தபோது ஆஸ்திரேலிய இளம்பெண் ஒருவருக்கு இந்திய ரசிகர் ஒருவர் முழங்காலிட்டு தனது காதலை வெளிப்படுத்தினார்.

அவரது காதலை ஆஸ்திரேலிய இளம்பெண்ணும் ஏற்றுக்கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோற்றாலும் காதலில் வென்றுவிட்டோம் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு இந்திய ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த காதலர் தீபென் மண்டலியா, மைதானத்தில் காதலை வெளிப்படுத்தியது முன்கூட்டியே திட்டமிட்ட ஒன்று என தெரிவித்தார். ஆனால் தனக்கு இதுகுறித்து ஏதுவுமே தெரியாது என்று ஆஸ்திரேலிய இளம்பெண் ரோஸ் தெரிவித்துள்ளார். காதலை வெளிப்படுத்திய தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், இதை தொலைக்காட்சியில் பார்த்த பின் பலரும் தங்களை செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்