கண்ணீர்விட்டு அழுத ரவி சாஸ்திரி... உணர்ச்சி வசப்பட்ட ரிஷப் பந்த்!.. இந்திய அணியை உருகைவத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியில் நடந்த உணர்வுப்பூர்வமான சம்பத்தை பற்றி இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் விவரித்துள்ளார் 

இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் டெஸ்ட் தொடர் மற்றும் டி20 தொடரை சிறப்பாக வெற்றி கொண்டது.

இந்த சுற்றுப்பயணத்தின்போது இறுதியில் விளையாடப்பட்ட டெஸ்ட் தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை வெற்றி கொண்டு இமாலய சாதனை படைத்தது. 

அதிலும் பிரிஸ்பேனின் காப்பாவில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆட்டம் மிகவும் சிறப்பாக அமைந்தது. புஜாரா, பந்த் உள்ளிட்டவர்கள் கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பந்து வீச்சாளர்களின் பௌலிங்கும் பிரமாதமாக அமைந்திருந்தது. 

இந்த போட்டியின் வெற்றி இந்திய வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் காப்பாவின் வெற்றியை அடுத்து தலைமை கோச் ரவி சாஸ்திரி அழுதுவிட்டதாக குல்தீப் யாதவ் கூறியுள்ளார். யாரி ஸ்போர்சிற்காக பேசியபோது இதனை அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், காப்பா வெற்றி இந்திய வீரர்கள் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியதாகவும், குறிப்பாக ரிஷப் பந்த் மிகவும் நெகிழ்ச்சிக்குள்ளானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விராட் கோலி இல்லாத இந்த தொடரின் வெற்றியை இந்திய இளம் வீரர்கள் சாத்தியப்படுத்தினர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்