"'CSK' ஜெயிச்சுட்டா போதும்... 'ஆள' கையிலேயே 'புடிக்க' முடியாது... வேற 'லெவலில்' வைரலாகும் 'ட்வீட்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் சீசனில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லீக் சுற்றின் முதல் பாதியில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி கண்டுள்ள நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது குறித்து ட்விட்டரில் இம்ரான் தாஹிர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 'போடா அந்த ஆண்டவனே நம்ம பக்கம். ஐபிஎல் எங்க கோட்டை, இங்க இருந்து ஒரு பிடி மண்ணை கூட நீங்க எடுத்துட்டு போக முடியாது. இனி தான் பாக்க வேண்டியது நெறய இருக்கு' என குறிப்பிட்டுள்ளார். 

 


முன்னதாக, ஹர்பஜன் சிங் சென்னை அணியில் இணைந்தது முதல் ட்விட்டரில் தொடர்ந்து தமிழில் ட்வீட் செய்து வந்தார். அவரைத் தொடர்ந்து, இம்ரான் தாஹிரும் சிஎஸ்கே வெற்றி பெறும் போதெல்லாம் இதே போன்று தமிழில் ட்வீட் செய்து வருகிறார். வழக்கம் போல அவரது அனைத்து பதிவுகளும் சென்னை ரசிகர்களிடையே அதிகம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்