"ஆரம்பிக்கலாங்களா??.." 'சிஎஸ்கே' போட்ட 'ட்வீட்'... பதிலுக்கு 'பிரபல' வீரர் சொன்னது தான் 'அல்டிமேட்'... வைரலாகும் 'பதிவு'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடருக்கான ஏலம், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றிருந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முழு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. ஐபிஎல் போட்டிகள் நெருங்கி வருவதையொட்டி சில அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கவுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி, அம்பத்தி ராயுடு உள்ளிட்ட வீரர்கள், சில தினங்களுக்கு முன் சென்னை வந்தடைந்தனர்.

கடந்த சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ஆவது இடத்தில் இருந்த நிலையில், முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியிருந்தது. தோனி உள்ளிட்ட சீனியர் வீரர்களின் ஆட்டம், அதிக விமர்சனத்துக்குள் ஆன நிலையில், இந்த முறை அனைத்தையும் சரி செய்து விட்டு, களம் காணும் முனைப்பில் சென்னை அணி உள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகள் தொடங்கப்படுவதை குறிப்பிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில், 'ஆரம்பிக்கலாங்களா?' என ட்வீட் செய்திருந்தது.


இதனைப் பகிர்ந்த சென்னை அணி வீரர் இம்ரான் தாஹிர், 'ஆரம்பிச்சுட்டா போச்சு. நல்ல தரமான சிறப்பான சம்பவங்கள் காத்துட்டு இருக்கு. இப்போ இல்லேன்னா எப்போவும் இல்லை. விடக்கூடாது சத்தியமா விடவே கூடாது. பாக்கத் தானே போறீங்க இந்த காளியோட ஆட்டத்த. ஒரு தடவை தான் தவறும்' என குறிப்பிட்டுள்ளார்.

 

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வரும் இம்ரான் தாஹிர், அதன் பிறகு, ட்வீட்களை தமிழில் தான் அதிகம் செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக, ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் சமயங்களில், இவர் தமிழில் செய்யும் ட்வீட்கள், அதிக வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்