இத கொஞ்சம் கூட ‘எதிர்பார்க்கல’.. இந்திய அணியில் இடம்பிடித்த ‘தமிழக’ வீரர் சொன்ன வார்த்தை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியில் இடம்பிடித்தது குறித்து தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்துள்ளார்.

13-வது சீசன் ஐபிஎல் தொடரில் தமிழகத்தை சேர்ந்த வீரர் வருண் சக்கரவர்த்தி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சார்பாக விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் ரன் மழை பொழியும் வீரர்கள் கூட இந்த ஐபிஎல் தொடரில் வருண் சக்கரவர்த்தியின் பந்து வீச்சில் சரணடைந்துள்ளனர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதில் டெல்லி அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

இந்தநிலையில் ஆஸ்திரிலேயாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய டி20 அணியில் வருண் சக்கரவர்த்தி இடம்பிடித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், ‘என் மனதில் இருக்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. இந்திய அணிக்காக விளையாட நான் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெரிய விஷயம். அணியில் இடம்பிடிப்பேன் என ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

முதலில் கொல்கத்தாவுக்காக ஒரு ஆட்டத்தை கூட மிஸ் செய்யாமல் விளையாட வேண்டும் என்பதே என் இலக்காக இருந்தது. விளையாடிவிட்டு வந்த பிறகுதான் இந்திய அணியில் இடம்பிடித்த விவரம் தெரிய வந்தது. நிச்சயம் இந்திய அணிக்காக என் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்’ என வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்