"எத்தனை சோதனை வந்தாலும்... அது எல்லாத்தையும் தாண்டி வருவோம்'ல..." இனி இருக்கு என்னோட ஆட்டம்... இரண்டாவது ரவுண்டில் கிடைத்த 'சான்ஸ்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் தற்போது சென்னையில் வைத்து நடைபெறும் நிலையில், மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

முதல் சுற்றில் யாரும் வாங்க முற்படாத வீரர்கள் பெயர் தற்போது மீண்டும் ஏலத்தில் கூறப்பட்டு வரும் நிலையில், கேதார் ஜாதவை ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி, அவரது அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கே எடுத்துள்ளது. கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்த கேதார் ஜாதவை சென்னை அணி கழற்றி விட்டது. இதனைத் தொடர்ந்து, அவரது பெயர் இன்றைய ஏல பட்டியலில் இணைக்கப்பட்டிருந்த நிலையில், முதல் சுற்றில் அவரை யாரும் எடுக்கவில்லை.

இதனால், ரசிகர்கள் அவரை அதிகமாக ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில், கேதார் ஜாதவை தற்போது ஹைதராபாத் அணி எடுத்துள்ளது. முன்னதாக, சென்னை அணியில் இடம்பெற்றிருந்த கேதார் ஜாதவ், கடந்த சீசனில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதனால், அவரது பேட்டிங் கடும் விமர்சனத்துக்குள் ஆனது.

இதனால், சென்னை அணியில் இருந்து அவரை கழற்றி விட வேண்டுமென சிஎஸ்கே ரசிகர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி, சென்னை அணியும் அவரை வெளியேற்றிய நிலையில், ஹைதராபாத் அணி அவரை தற்போது வாங்கியுள்ளது.

இந்திய அணிக்காக பல போட்டிகளில் சிறப்பாக ஆடியுள்ள கேதார் ஜாதவ், ஒரே ஒரு ஐபிஎல் சீசனில் சிறப்பாக ஆடாததன் காரணமாக, கிண்டல் கேலிக்கு ஆன நிலையில், இம்முறை நிச்சயம் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துவார் என மறுபக்கம் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்