‘3, 4 மாசமா என்ன பண்ணிட்டு இருந்தீங்க?’.. 2 தடவையும் ‘மிஸ்’-ஆன வாய்ப்பு.. வருண் சக்கரவர்த்தியை கடுமையாக சாடிய முன்னாள் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

யோ யோ டெஸ்ட்டில் தோல்வியடைந்த வருண் சக்கரவர்த்தியை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹேம்ங் பதானி கடுமையாக சாடியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று (12.03.2021) அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாட தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியும் தேர்வாகியிருந்தார். ஆனால் உடற்தகுதி தேர்வான யோ யோ டெஸ்ட்டில் அவர் தேர்ச்சி பெறவில்லை. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை அவர் மிஸ் செய்துள்ளார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி வருண் சக்கரவர்த்தியை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், ‘மூன்று, நான்கு மாதங்களாக எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் இருந்தீர்கள். அந்த சமயத்தில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். முன்கூட்டியே உங்களை நீங்கள் தயார்படுத்தி கொண்டிருக்க வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் வருண் சக்கரவர்த்தி தேர்வாகி இருந்தார். ஆனால் காயம் காரணமாக அந்த தொடரில் இருந்தும் அவர் விலகினார். சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாட இரண்டு முறை வாய்ப்பு கிடைத்தும் அதை வருண் சக்கரவர்த்தி தவறவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்