'கிரிக்கெட்டின் சர்வ வல்லமை படைத்த பேட்ஸ்மேன் இவர்தான்!' - புகழ்ந்து தள்ளிய உலக லெவல் ‘கிரிக்கெட்’ பிரபலம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டின் சர்வ வல்லமை படைத்த பேட்ஸ்மேன் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் பாராட்டியுள்ளார்.

இதுபற்றி பேசிய விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டின் சர்வ வல்லமை படைத்த பேட்ஸ்மேன் கோலிதான் என கருதுவதாகவும்,  ஆகார்ஷமும், அதோடு சேர்ந்த நேர்த்தியும் அவரது ஆட்டத்தில் இருப்பதாகவும், அவருக்கு கிரிக்கெட் மீது இருக்கும் அர்ப்பணிப்பின் வெளிப்பாடுதான் அது என கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான மார்க் டெய்லர் சச்சின், லாரா மற்றும் இன்சமாம் உல் ஹாக் மாதிரியான தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் விளையாடிய காலத்தில் கிரிக்கெட் விளையாடியவர் என்பதும், இந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு போட்டி மட்டும் ஆடிய பின்னர் கோலி இந்தியா திரும்புவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்