தோனிதான் பெஸ்ட் கேப்டன்.. சிஎஸ்கே அணியில் விளையாட ஆசை.. ஆர்சிபி வீரர் ஓபன் டாக்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முன்னாள் ஆர்சிபி வீரர் சிஎஸ்கே அணியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தோனிதான் பெஸ்ட் கேப்டன்.. சிஎஸ்கே அணியில் விளையாட ஆசை.. ஆர்சிபி வீரர் ஓபன் டாக்..!
Advertising
>
Advertising

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி மாதம் பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் இணைய உள்ளன. அதனால் அனைத்து அணியிலும் உள்ள வீரர்கள் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது.

Harshal Patel picks CSK Dhoni as his favourite captain

அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் விளையாடிய 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியது. அதன்படி சிஎஸ்கே அணி கேப்டன் தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயின் அலி ஆகிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளது. அதேபோல் ஆர்சிபி அணி விராட் கோலி, மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் ஆகிய 3 வீரர்களை தக்கவைத்துள்ளது.

Harshal Patel picks CSK Dhoni as his favourite captain

இதில் ஆர்சிபி அணியில் சிறப்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் தக்க வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு காரணம், கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் பெங்களூரு அணி வெற்றி பெற ஹர்ஷல் படேல் முக்கிய காரணமாக இருந்தார். மேலும் தொடரிலேயே அதிக விக்கெட்டுகள் எடுத்து பர்பில் தொப்பியையும் கைப்பற்றி இருந்தார். இப்படி உள்ள சூழலில் பெங்களூரு அணி இவரை தக்க வைக்காமல் விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. காரணமாக இந்த ஏலம் மெகா அளவில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் பெங்களூரு அணி தன்னை தக்கவைக்காதது குறித்து ஹர்ஷல் படேல் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறிய அவர், ‘ஏல தொகையை கணக்கில் கொண்டு நான் பெங்களூரு அணியால் தக்கவைக்கப்படவில்லை என பயிற்சியாளர் மைக் ஹெசன் என்னிடம் கூறினார். அவர்கள் என்னை பெங்களூரு அணியில் விளையாட வைக்க மிகவும் விரும்பினார்கள். நானும் பெங்களூரு அணியில் விளையாட மிகவும் விரும்பினேன். ஏனென்றால் பெங்களூரு அணிக்காக 2021 சீசனில் விளையாடியதால்தான் எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுமையாக மாறியது. ஆனால் இதுவரை எந்த அணியில் இருந்தும் எனக்கு அழைப்பு வரவில்லை’ என ஹர்ஷல் படேல் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘தோனிதான் எனக்கு ரோல் மாடல். கிரிக்கெட் வரலாற்றில் அவர் ஒரு மிகச்சிறந்த கேப்டன். பெங்களூரு அணியில் இல்லாமல் போனால், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் விளையாட விரும்புகிறேன்’ என ஹர்ஷல் படேல் விருப்பம் தெரிவித்துள்ளார். இது சிஎஸ்கே ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MSDHONI, CSK, RCB, IPL, IPL2022, HARSHALPATEL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்