VIDEO: இலங்கை ரசிகர்களின் ‘நெஞ்சை’ தொட்ட பாண்ட்யா.. வைரலாகும் வீடியோ.. அப்படி என்ன செய்தார்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளை விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 3 தொடரில் 2-1 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேடிங்க செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 50 ரன்களும், கேப்டன் ஷிகர் தவான் 46 ரன்களையும் எடுத்தனர். இலங்கை அணியைப் பொறுத்தவரை சமீரா மற்றும் ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளும், சமிகா குணரத்னே 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி, 18.3 ஓவர்களில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்திய அணியைப் பொறுத்தவரை புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளும், தீபக் சஹார் 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா, சாஹல், க்ருணால் பாண்ட்யா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த நிலையில் இலங்கை தேசிய கீதத்தை பாடிய இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னால், இரு நாட்டு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது இலங்கை நாட்டின் தேசிய கீதம் ஒலித்த போது, அந்நாட்டு வீரர்கள் பாடி மரியாதை செலுத்தினர். அந்த சமயம் ஹர்திக் பாண்ட்யாவும் அந்நாட்டு தேசிய கீதத்தைப் பாடினார். இந்த வீடியோவை இலங்கை கிரிக்கெட் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்