திடீரென ஷிகர் தவானை பார்த்து... கைகூப்பி வணங்கிய 'ஹர்திக் பாண்டியா'.. பின்னாடி இருக்கும் 'சுவாரஸ்ய' சம்பவம்!.. 'வைரல்' வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான கடைசி ஒரு நாள் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இரு அணிகளும் வெற்றி பெறும் நோக்கில் போராடி வருகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடர், 1 - 1 என்ற சமநிலையில் உள்ளதையடுத்து, இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும். முன்னதாக, இரண்டாவது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் குவித்தும், இங்கிலாந்து வீரர்கள் பேர்ஸ்டோ மற்றும் ஸ்டோக்ஸ் (Ben Stokes) ஆகியோர் அதிரடியாக ஆடி, எளிதாக இந்திய அணியை வீழ்த்தினர். அதிலும் குறிப்பாக, ஸ்டோக்ஸ் சிக்ஸர் மழை பொழிந்தார்.

இதனையடுத்து, இன்றைய போட்டியில், ஸ்டோக்ஸ் 15 ரன்னில் இருந்த போது, கொடுத்த கேட்ச் ஒன்றை ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) தவற விட்டார். இதனால், அவர் முந்தைய போட்டியை போல இன்றும் அடித்து நொறுக்கி விடுவார் என்பதால், சற்று பரபரப்பு நிலவியது. அதன்படி, அவரும் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, சிக்ஸர் மற்றும் சில பவுண்டரிகளை அடித்தார்.

இந்நிலையில், நடராஜன் (Natarajan) வீசிய பந்தை எதிர்கொண்ட ஸ்டோக்ஸ், டீப் மிட் விக்கெட் திசையில் ஓங்கி அடித்தார். அப்போது அங்கு நின்ற ஷிகர் தவான் (Shikhar Dhawan), அதனை கேட்ச் செய்து ஸ்டோக்ஸை அவுட்டாக்கினார். இதனால், இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், மைதானத்திற்குள் வேறொரு நிகழ்வும் அரங்கேறியது.

 


முதலில் ஸ்டோக்ஸ் கேட்சைத் தவற விட்ட ஹர்திக் பாண்டியா, ஷிகர் தவானைப் பார்த்து, கைகூப்பி வணங்கி, மைதானத்தில் விழுந்து வணங்கவும் செய்தார். தான் தவற விட்ட விக்கெட்டிற்கு, சீக்கிரமே ஷிகர் தவான் முடிவு கட்டியதை எண்ணி, மகிழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா செய்த இந்த செயல் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்