VIDEO: ‘அவ்ளோ வெறி மாப்ளைக்கு’!.. எங்கபோய் அடிக்க ஓடுறாரு பாருங்க.. சிரிப்பை வரவழைத்த ராஜஸ்தான் வீரரின் செயல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல் வீரர் ஒருவர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தோனி (Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கும், சஞ்சு சாம்சன் (Sanju Samson) தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கும் இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை எடுத்தது. அதிபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் சதம் (101* ரன்கள்) அடித்து அசத்தினார். அதேபோல் 6-வது வீரராக களமிறங்கிய ஆல்ரவுண்டர் ஜடேஜா 15 பந்துகளில் 32 ரன்கள் (4 பவுண்டரி, 1 சிக்சர்) அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக சிவம் துபே 64 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 50 ரன்களும் அடித்து அசத்தினர்.

இந்த நிலையில், இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் க்ளென் பிலிப்ஸ் (Glenn Phillips) செய்த செயல் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. அதில், போட்டியின் 17-வது ஓவரை சென்னையின் ஆல்ரவுண்டர் சாம் கர்ரன் (Sam Curran) வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்தை வீசும்போது எதிர்பாராத விதமாக, சாம் கர்ரனின் கையை விட்டு பந்து நழுவிச் சென்றது.

அதனால் ஸ்டம்பை விட்டு சில தூரம் தள்ளிச் சென்றது. அப்போது பேட்டிங் செய்த க்ளென் பிலிப்ஸ், அந்த பந்தை அடிப்பதற்காக வேகமாக ஓடினார். இதனால் மைதானத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்