‘அவங்க ரெண்டு பேர் மட்டும் நல்லா பந்து வீசிட்டாங்களா..?’ ஏன் இவரை மட்டும் ‘டார்கெட்’ பண்றீங்க..? விட்டு விளாசிய முன்னாள் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை மதரீதியாக விமர்சித்ததற்கு கௌதம் கம்பீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியா மற்றும் பாகிஸ்தானிக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை லீக் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிடம் இந்தியாவிடம் தோல்வியடைவது இதுதான் முதல் முறை. அதனால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் இந்திய வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். அதில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி (Mohammed Shami) மீது மதரீதியாக அவதூறு பரப்பினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரும் (Gautam Gambhir) முகமது ஷமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘அப்போட்டியில் இந்தியா தோற்றதைப் பற்றி எல்லாரும் பேசுகிறார்கள். ஆனால் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடியதை ஏன் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை? அதேபோல் முகமது ஷமி மட்டும்தான் மோசமாக பந்து வீசினாரா? பும்ராவும், புவனேஷ்வர் குமாரும் சிறப்பாக பந்து வீசிவிட்டனரா?’ என கம்பீர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘முகமது ஷமியை எனக்கு நன்றாக தெரியும். நான் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தபோது ஷமியும் அந்த அணிக்காக விளையாடினார். அப்போது மிகவும் கடினமாக பயிற்சிகளை மேற்கொள்வார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் நிறையை சாதனைகளை படைத்துள்ளார். இப்படிப்பட்ட வீரரை மதரீதியாக விமர்சிப்பது மிகவும் தவறு’ என கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்