ஆத்தீ.. என்னா கோவம்.. தோல்வியால் அதிருப்தி.. வைரலாகும் கம்பீர் போட்டோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் பெங்களூரு அணிக்கு எதிராக லக்னோ அணி தோல்வி அடைந்ததை அடுத்து கேப்டன் கே.எல்.ராகுலை, கௌதம் கம்பீர் முறைத்துப் பார்த்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | IPL ப்ளே ஆஃப்-ல செலக்ட் ஆகாம வீட்டுக்கு வந்த தவானுக்கு ‘நாக் அவுட்’ விட்ட அப்பா.. ‘செம’ வைரல்..!

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்று நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 112 ரன்களும், தினேஷ் கார்த்திக் 37 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்கோ அணியை பொறுத்தவரை ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், ஆவேஷ் கான் மற்றும் க்ருணால் பாண்ட்யா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் தோல்வி பெற்றதன் மூலம் ஐபிஎல் தொடரில் இருந்து லக்னோ அணி வெளியேறியது.

இதனால் அதிருப்தி அடைந்த லக்னோ அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர், போட்டி முடிந்ததும் கேப்டன் கே.எல்.ராகுலை கோபமாக முறைத்துப் பார்த்தார். இந்த போட்டோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Also Read | “கடைசியா ஒரு தடவை பேசணும்”.. நம்பி போன இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கைதான காதலன்..!

CRICKET, GAUTAM GAMBHIR, KL RAHUL, LSG, RCB, IPL 2022 ELIMINATOR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்