"அவரு ஒருத்தர மட்டும் அசால்ட்டா விட்டீங்க... அப்புறம் இரக்கமே பாக்காம பொளந்து கட்டிடுவாரு..." ஆஸ்திரேலிய 'டெஸ்ட்' அணியை எச்சரித்த 'பின்ச்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 17 ஆம் தேதியன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

பகலிரவு போட்டியாக இந்த டெஸ்ட் நடைபெறவுள்ள நிலையில், இதில் மட்டுமே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பங்கேற்கவுள்ளார். அதற்கடுத்து, தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி அவர் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இந்தியா திரும்பவுள்ளார்.  

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டின் கேப்டன் ஆரோன் பின்ச், ஆஸ்திரேலிய டெஸ்ட்  அணிக்கு எச்சரிக்கை ஒன்றை அளித்துள்ளார். 'இந்திய கேப்டன் கோலி பேட்டிங் செய்யும் போது அவரை சுதாரிக்க விட்டு விடக் கூடாது. அப்படி விட்டு விட்டால் பின்பு எதிராணியிடம் கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல் அடித்து ஆடத் துவங்கி விடுவார். அதனால் நிலையான பந்து வீச்சு மூலம் கோலியை சீக்கிரம் வீழ்த்த ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி முயற்சிக்க வேண்டும்' என பின்ச் குறிப்பிட்டுள்ளார்.

கோலி மற்றும் பின்ச் ஆகியோர் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக இணைந்து ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்