அய்யோ ‘கேமராவை’ இந்த பக்கம் திருப்பிறாதீங்க..! ரசிகர் எழுதியிருந்த ‘அந்த’ வாசகம்.. ‘செம’ வைரல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ரசிகர் ஒருவர் காண்பித்த பதாகை இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் ஷர்மா 33 ரன்களும், டி காக் 55 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை மும்பை அணி எடுத்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 15.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்தது. அதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 74 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 53 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்துக்கு கொல்கத்தா அணி முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் இப்போட்டியை காண வந்த ரசிகர் ஒருவர், ‘என்னை கேமராவில் காட்டி விடாதீர்கள். என்னுடைய மனைவி நான் வேலை செய்துகொண்டிருப்பேன் என நினைத்துக் கொண்டிருப்பாள்’ என்ற பதாகை காண்பித்தார்.

அவர் அப்படி குறிப்பிட்டதாலோ என்னவோ, கேமாராமேன் அடிக்கடி அவரை காண்பித்துக் கொண்டிருந்தார். இது வைரலான நிலையில், ரசிகர்கள் பலரும் இதற்கு கிண்டலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்