IPL 2022 : "கைய குடுங்க கேமராமேன்".. IPL மேட்ச் பாக்க வந்த ரசிகைக்கு உருவான ஆர்மி.. ஊரு, பேரு, Insta ஐடி வரை புடிச்சுட்டாங்க போல?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டிக்கு நடுவே இளம்பெண் ஒருவர் அடிக்கடி கேமராவில் தோன்றி வந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் இது தொடர்பான பதிவுகள், அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

“நாங்க வேணா அம்பயர் அனுப்பட்டுமா”.. விராட் கோலி அவுட் சர்ச்சை.. பிசிசிஐயை கிண்டலடித்த நாடு..!

நேற்று (10.04.2022) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், டெல்லி கேப்பிடல் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி இருந்தன.

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல் அணி, ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஆடி ரன் சேர்த்தது.

அபார வெற்றி பெற்ற டெல்லி

தொடக்க வீரர் பிரித்வி ஷா 51 ரன்களும், மற்றொரு தொடக்க வீரரான டேவிட் வார்னர் 61 ரன்களும் எடுத்திருந்தனர். இறுதியில், ஷர்துல் தாகூர் தனது பங்குக்கு அதிரடி காட்ட, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களை டெல்லி அணி குவித்திருந்தது. தொடர்ந்து, சற்று கடின இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் மட்டும் சற்று அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகவே, கடைசி ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த கொல்கத்தா அணி, 171 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தங்களின் இரண்டாவது வெற்றியை இந்த தொடரில் பதிவு செய்துள்ளனர். கொல்கத்தா அணியின் நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி பட்டையைக் கிளப்பி இருந்த குல்தீப் யாதவ், ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

கவனம் ஈர்த்த பெண் ரசிகை

இதற்கு முந்தைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றிருந்த போதும் குல்தீப் தான் ஆட்டநாயகன் விருதினை பெற்றிருந்தார். இந்நிலையில், இந்த போட்டிக்கு மத்தியில், பார்வையாளராக இருந்த ஒரு பெண்ணின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. பொதுவாக, ஐபிஎல் தொடரின் போது, பிரபலம் ஆகாமல் இருக்கும் பல பெண் ரசிகைகள், கேமராவின் கவனத்தில் பட்டு, ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் வைரலாவார்கள்.

கடந்த பல தொடர்களில், இப்படி ஒரு சம்பவம் நடந்து, அந்த பெண் ரசிகை யார் என்பது வரை, நெட்டிசன்கள் மற்றும் ஐபிஎல் ரசிகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். அந்த வகையில், டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியின் போது, வெள்ளை நிற உடை அணிந்திருந்த பெண் ஒருவர், அடிக்கடி கேமராவில் தோன்றிக் கொண்டிருந்தார்.

வைரலாக்கிய நெட்டிசன்கள்

போட்டிகள் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்க, அவர் சிரித்துக் கொண்டிருப்பதும், ஆச்சரியத்துடன் சில முக பாவனைகள் கொடுப்பதும் என பல தருணங்கள், அடிக்கடி கேமராவில் தெரிந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட ரசிகர்கள், கிரிக்கெட் போட்டிகளையும் கொஞ்சம் காட்டுங்கள் என கேமரா மேனை குறிப்பிடும் வகையில், சில மீம்ஸ்களை பறக்க விட்டனர்.

அது மட்டுமில்லாமல், இன்னும் ஒரு படி மேலே போய், அந்த பெண்ணின் பெயர் மற்றும் இன்ஸ்டா ஐடி உள்ளிட்ட விவரங்களையும் நெட்டிசன்கள் கண்டுபிடித்து குறிப்பிட்டு வருகின்றனர். அவரின் பெயர் ஆர்த்தி பேடி என்றும் ரசிகர்கள் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு வருகின்றனர். அதே போல, போட்டிக்கு பின்னர் அவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

"தோனி தான் இனி 'CSK' ஓப்பனர்?.." ஆசைப்படும் முன்னாள் 'சென்னை' வீரர்.. அப்படி நடந்தா என்ன ஆகும் தெரியுமா?

CRICKET, IPL, FAN GIRL, KKR VS DC, IPL 2022, KOLKATA KNIGHT RIDERS, DELHI CAPITALS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்