VIDEO: திடீரென மைதானத்துக்குள் நுழைந்து சல்யூட் அடித்த ரசிகர்.. உடனே பாகிஸ்தான் வீரர் செய்த செயல்.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertising
>
Advertising

பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று முல்தான் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 77 ரன்களும், இமாம்-உல்-ஹக் 71 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை அகேல் ஹொசைன் 3 விக்கெட்டுகளும், அல்சாரி ஜோசப் மற்றும் ஆண்டர்சன் பிலிப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 32.2 ஓவர்களில் 155 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால் 120 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதில் பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் முகமது நவாஸ் 4 விக்கெட்டுகளும், முகமது வாசிம் ஜூனியர் 3 விக்கெட்டுகளும், ஷதாப் கான் 2 விக்கெட்டுகளும், ஷாகின் அப்ரிடி 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த நிலையில், இப்போட்டியின் 39-வது ஓவரில் பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் ஒருவர், நேராக ஷதாப் கானை நோக்கி சென்று சல்யூட் அடித்தார்.

உடனே ஷதாப் கான் அந்த ரசிகரை கட்டிப்பிடித்தார். இதனை அடுத்து அவர் திரும்பிச் சென்றார். அப்போது வேகமாக வந்த பாதுகாப்பு அதிகாரிகள், மைதானத்துக்குள் இருந்த ரசிகரை வெளியே அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மைதானத்தில் பரபரப்பு நிலவியது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்