IPL 2023 : "சார் இந்த தடவ சென்னை".. ரசிகர் கேட்ட கேள்விக்கு தோனி சொன்ன பதில்.. வைரல் வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி 20 உலக கோப்பைத் தொடர் முடிவடைந்ததையடுத்து, இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து கிரிக்கெட் தொடர்களில் ஆடி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | தாத்தாவோட சுயசரிதையில் இருந்த பக்கங்கள்.. தமிழ்நாட்டை தேடிவந்த பிரிட்டன் நபர்.. மனதை நெகிழ வைத்த பின்னணி!!

இது ஒருபுறம் இருக்க, அடுத்ததாக ஐபிஎல் குறித்த செய்திகளும் அதிகம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வலம் வந்த வண்ணம் உள்ளன.

இதற்கு காரணம், 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பான மினி ஏலம், டிசம்பர் 23 ஆம் தேதி கொச்சியில் வைத்து நடைபெற உள்ளது தான்.

மொத்தமுள்ள 10 ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியில் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதனையடுத்து, இந்திய இளம் வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் பதிவு செய்துள்ளதால், தங்களின் ஃபேவரைட் அணிகள் எந்தெந்த வீரர்களை எடுக்கும் என்பதை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

இதில் ஐபிஎல் அணிகளில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. இதுவரை நடந்துள்ள ஐபிஎல் போட்டிகளில் நான்கு முறை தோனி தலைமையிலான சென்னை அணி கோப்பையை கைப்பற்றி உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு, சிஎஸ்கே கோப்பையை வென்றிருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஒன்பதாவது இடம் பிடித்து பரிதாபமாக வெளியேறி இருந்தது.

இதனால் இந்த முறை நிச்சயம் தோனியின் அணி மிகச் சிறந்த முறையில் கம்பேக் கொடுக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதேபோல சிஎஸ்கே அணையில் இருந்து பிராவோ, உத்தப்பா, ஜெகதீசன் உள்ளிட்ட எட்டு வீரர்களை அந்த அணி ஏலத்துக்கு முன்பாக விடுவித்து இருந்தது.

மேலும் தோனி, ஜடேஜா, ருத்துராஜ், மொயீன் அலி உள்ளிட்ட பல வீரர்கள் மீண்டும் சிஎஸ்கே அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளதால் வரும் தொடரில் நிச்சயம் சென்னை அணி தங்களின் திறனை வெளிப்படுத்தும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அணியில் இருந்து வெளியேறிய பிராவோ அந்த அணியின் பவுலிங் பயிற்சியாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சில ரசிகர்கள் சமீபத்தில் சிஎஸ்கே கேப்டன் தோனியிடம் கேட்ட கேள்வியும்,  அதற்கு அவர் சொன்ன பதிலும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

சில ரசிகர்கள் தோனியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட சமயத்தில், அதில் ஒருவர் இந்த முறை சென்னை அணி கோப்பையை கைப்பற்றுவது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் சொன்ன தோனி, "முயற்சி செய்கிறோம்" என தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ , தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

Also Read | "அந்த சம்பவம் எங்களை ரொம்ப பாதிச்சிடுச்சு".. மனம் திறந்த அர்ஜென்டினா கோச்.. வெற்றிக்கு பின்னால் இருந்த மறக்க முடியாத வலி..!

CRICKET, CSK, MS DHONI, DHONI FANS, IPL, IPL 2023, CHENNAI SUPER KINGS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்