ஏலம் முடிஞ்சதும்.. 'கோலி' அனுப்பிய 'மெசேஜ்'.. சீக்ரெட் பகிர்ந்த 'டு பிளஸ்ஸிஸ்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில். பெங்களூரில் வைத்து ஐபிஎல் ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

Advertising
>
Advertising

"இப்போ கல்யாணம் பண்ணிக்குறியா இல்லியா??.." ஆறு வருட காதல்.. 'காதலி' முடிவால்.. கோபம் தலைக்கேறிய இளைஞரின் பதற வைக்கும் செயல்

அனைத்து ஐபிஎல் அணிகளும், ஐபிஎல் ஏலத்தின் முடிவில், சிறந்த வீரர்களைத் தேர்ந்து எடுத்துள்ளது. வரவிருக்கும் ஐபிஎல் தொடரில், அணி வீரர்களை ஒன்றிணைத்து கோப்பையைக் கைப்பற்றுவதற்கான பணிகளிலும், ஐபிஎல் அணிகள் விரைவில் ஈடுபடும் என தெரிகிறது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்த முடிவுகள், ரசிகர்கள் மத்தியில் அதிகம் கேள்வியினை ஏழுப்பியிருந்தது.

சிஎஸ்கே அணி

முதல் நாள் ஏலத்தின் போது, சிஎஸ்கே அணி மொத்தம் ஆறு வீரர்களை ஏலத்தில் எடுத்திருந்தது. இதில், பிராவோ, அம்பத்தி ராயுடு, தீபக் சாஹர், உத்தப்பா மற்றும் ஆசிப் ஆகிய 5 வீரர்கள், கடந்த ஆண்டும் சிஎஸ்கே அணிக்காக ஆடிய வீரர்கள் தான். இவர்களை எல்லாம் ஏலத்தில் போட்டி போட்டு எடுத்த சிஎஸ்கே, அந்த அணியின் நட்சத்திர வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் டுபிளஸ்ஸிஸ் ஆகியோரை ஏலத்தில் எடுக்க முயலவில்லை.

உருக்கமான வீடியோ

இதில், சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே உள்ளிட்ட எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை. ரெய்னாவை ஏன் எடுக்கவில்லை என்பதற்கு விளக்கத்தையும் சிஎஸ்கே அணி அளித்திருந்தது. இன்னொரு பக்கம், தொடக்க வீரர் டு பிளஸ்ஸிஸை, பெங்களூர் அணி, 7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. தொடர்ந்து, சென்னை அணியில் இருந்து பிரிந்த டு பிளஸ்ஸிஸ், அது பற்றி உருக்கமான வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

பெங்களூர் அணியில் டு பிளஸ்ஸிஸ்

பெங்களூர் அணியின் கேப்டனாக கடந்த சீசனில், விராட் கோலி செயல்பட்டு வந்தார். ஆனால், தொடர் முடிந்ததும் அந்த பதவியில் இருந்து, தான் விலகிக் கொள்வதாக கோலி அறிவித்திருந்தார். தொடர்ந்து, இந்த ஏலத்தின் மூலம் தான், பெங்களூர் அணியின் கேப்டன் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. தற்போது, டு பிளஸ்ஸிஸ் அணிக்கு வந்துள்ளதால், அவர் கேப்டன் பதவிக்கு பொருத்தமாக இருப்பார் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.

டு பிளஸ்ஸிஸ் - கோலி

இந்நிலையில், பெங்களூர் அணியில் இணைந்துள்ளது பற்றிப் பேசிய டு பிளஸ்ஸிஸ், 'பெங்களூர் அணியில் இணைந்த பிறகு, விராட் கோலி என்னை அணியில் வரவேற்று, ஒரு மெசேஜ் அனுப்பினார். அது மிகவும் சிறப்பான ஒன்றாக இருந்தது. எனக்கும், கோலிக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே, நல்லுறவு உள்ளது. சர்வதேச போட்டிகளில், இருவரும் எதிர் எதிர் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளோம். நாங்கள் இருவரும், அதிக போட்டித் தன்மை கொண்டவர்கள்.

காத்துக் கொண்டிருக்கிறேன்

எனவே, ஐபிஎல் போட்டியில் அவரை எதிர்த்து போட்டியிடாமல் இருப்பது நல்லது தான். ஏனென்றால், நான் அவுட்டாகும் போது, எதிரணியில் விராட் இருந்தால், சந்தோஷத்தில் என் காதருகில் கத்திக் கொண்டே ஓடுவார். அதனை நான் வெறுப்பேன். இனி ஒரே அணியில் ஆடினால், அதனை கேட்க வேண்டிய தேவை இருக்காது.

உலகின் தலைச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராட் கோலியுடன், இணைந்து ஆடுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. அதனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்' என கோலியுடன் இணைந்து ஆடவுள்ளது பற்றி, மிகவும் ஆவலுடன் டு பிளஸ்ஸிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

ஏலத்துல பிளேயர சரியா எடுக்கலன்னு குத்தம் சொல்றீங்களே.. அன்னைக்கு அவரு போன் எடுக்கலன்னா என்ன ஆகியிருக்கும் தெரியுமா??

FAF DU PLESSIS, VIRAT KOHLI, RCB, ஐபிஎல் ஏலம், சிஎஸ்கே அணி, விராட் கோலி, டு பிளஸ்ஸிஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்