ஐபிஎல் அணிகளுக்கு வந்த குட் நியூஸ்.. அப்போ அந்த ‘நாட்டு’ ப்ளேயர்ஸை எடுக்க போட்டா போட்டி நடக்குமே..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அணிகளும் மகிழ்ச்சியடையும் வகையில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

கேப்டன்ஷி பத்தி மட்டும் பேசிட்டு.. இதை பாராட்ட மறந்திடுறீங்க.. தோனி குறித்து அஸ்வின்..!

ஐபிஎல் மெகா ஏலம்

ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் ரசிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது.

பெங்களூரு

வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் வைத்து இந்த மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 590 வீரர்கள் பங்கேற்ற உள்ளனர். இந்த ஏலத்துக்கு முன்பாகவே ஒவ்வொரு அணியும், தங்கள் அணியில் ஏற்கனவே விளையாடிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளன.

இங்கிலாந்து வீரர்கள்

இந்த நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் முழுமையாக விளையாடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இது ஐபிஎல் அணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்றதால், பல வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரின் பாதியிலேயே விலகினர். இது ர்பல அணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

அணிகள் ஆர்வம்

இந்த சூழலில், இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடர் முழுவதும் இருப்பார்கள் என்பதால், ஏலத்தில் அந்நாட்டு வீரர்களை எடுக்க அணிகள் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் சில நிபந்தனைகளுடன் முழு ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

‘கண்ணை மூடி திறப்பதற்குள் கோடிஸ்வரர் ஆகிடுவாங்க’.. ஐபிஎல் ஏலத்தில் இந்த ரூல்ஸை கொண்டு வரணும்.. கவாஸ்கர் கொடுத்த புது ஐடியா..!

ENGLAND PLAYERS, IPL 2022, AUSTRALIAN PLAYERS, INDIAN PREMIER LEAGUE, IPL, ஐபிஎல், இங்கிலாந்து வீரர்கள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்