VIDEO: ‘அவரே பாவம் சோகமா போய்ட்டு இருக்காரு’.. கோலியை பார்த்து இங்கிலாந்து ரசிகர்கள் செஞ்ச சேட்டை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விராட் கோலி அவுட்டாகி பெவிலியன் திரும்பியபோது இங்கிலாந்து ரசிகர்கள் பாட்டு பாடி கிண்டல் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டில் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மாவும், கே.எல்.ராகுல் களமிறங்கினர். இதில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவரில் விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து கே.எல்.ராகுல் டக் அவுட்டாகி வெளியேறினார். இவரை தொடர்ந்து வந்த புஜாராவும் 1 ரன்னில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவரில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார்.

இந்த சந்தோஷம் நிலைப்பதற்குள் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய 11-வது ஓவரில் ஜாஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து கோலி வெளியேறினார். இதனை அடுத்து பெவிலியன் திரும்பியபோது இங்கிலாந்து ரசிகர்கள் சிலர் ‘Cheerio Virat’ என பாட்டு பாடி கோலியை கிண்டல் செய்தனர்.

போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே 3 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இந்திய அணி பறிகொடுத்தது. இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மா மற்றும் ரஹானே கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் அதுவும் நீண்ட நேரத்துக்கு நிலைக்கவில்லை. 18 ரன்கள் எடுத்திருந்தபோது ராபின்சன் ஓவரில் ரஹானே அவுட்டானார்.

இதனை அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தும் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதனால் 58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்கு இந்தியா சென்றுள்ளது. தற்போது ஆல்ரவுண்டர் ஜடேஜா-ரோஹித் ஷர்மா கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்