யுவராஜ் சிங் 'Face' பண்ண அந்த ஒரு பால் தான்.. என் வாழ்க்கை'ய மாத்திடுச்சு.. நெகிழ்ந்து போன 'சிஎஸ்கே' வீரர்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த 2006 ஆம் ஆண்டு, ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.

Advertising
>
Advertising

"எல்லாத்துக்கும் 'கவுதம்' அண்ணா தான் காரணம்.." ஒரே மேட்ச்'ல திரும்பி பார்க்க வைத்த இளம் வீரர்.. 'சிஎஸ்கே' மேட்ச்'லயும் சம்பவம் 'Loading' போல

இதில், டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி இருந்த நிலையில், ஒரு நாள் தொடரை 1 - 4 என்ற கணக்கில் இழந்து, படு தோல்வி அடைந்திருந்தது.

முதல் ஒரு நாள் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், அடுத்த நான்கு போட்டிகளிலும், வரிசையாக இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது.

ஜஸ்ட் மிஸ்ஸில் தோல்வி

அதிலும் குறிப்பாக, இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்வியை இன்றளவிலும் ரசிகர்கள் ஞாபகம் வைத்து வருகின்றனர். ஏனென்றால், ஒரு ரன் வித்தியாத்தில் இந்திய அணி அடைந்திருந்த தோல்வி, அதிர்ச்சிகரமான ஒன்றாக அந்த சமயத்தில் அமைந்திருந்தது. கடைசி ஐந்து பந்துகளில், இந்திய அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது.

யுவராஜ் சிங் முகம்

அப்போது யுவராஜ் சிங், இரண்டு பவுண்டரிகள் அடிக்க, கடைசி 3 பந்துகளில், 2 ரன்கள் தேவைப்பட்டது. அந்த சமயத்தில், பிராவோ வீசிய ஸ்லோ யார்க்கர் பந்தை யுவராஜ் சிங் தவறவிட, அது ஸ்டம்பை பதம் பார்த்தது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அசத்தி இருந்தது. தன்னுடைய விக்கெட்டால், ஏமாற்றத்தில் இருந்த யுவராஜ் சிங்கின் முகம், பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றும் நினைவில் இருக்கும் ஒன்றாகும்.

வாழ்க்கையை மாற்றி அமைத்த பந்து

இது பற்றி சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்துள்ள பிராவோ, "அந்த ஒரு பந்து தான் உலகளவில் என்னை திரும்பி பார்க்க வைத்தது. அதே போல, டி 20 கிரிக்கெட் பயணத்தையும் அந்த பந்து தான் எனக்கு ஆரம்பித்து வைத்தது" என தனது கிரிக்கெட் பயணத்தில் யுவராஜ் சிங் விக்கெட்டால் ஏற்பட்ட மாற்றம் பற்றி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய பிராவோ, "என்ன பந்து வீச வேண்டும் என நான் முடிவு எடுக்கவில்லை. பந்து வீச ஓடும் போது கூட, நான் சரிவர முடிவு மேற்கொள்ளவில்லை. நடுவர் அருகே சென்ற பிறகு தான், அப்படி ஒரு பந்து வீச நான் முடிவு செய்தேன். நான் வீசிய பல பந்துகள், என்னுடைய ஃபேவரைட்டாக உள்ளது. ஆனால், ஒரு பந்தை மட்டும் சொல்ல வேண்டும் என்றால், யுவராஜ்ஜிற்கு வீசிய பந்து தான். ஏனென்றால், எனது வாழ்க்கையை அது தான் மாற்றி அமைத்தது" என தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பிராவோ ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.

"நாம யாருங்குறது இந்த மேட்ச்-ல தெரிஞ்சிடும்".. அணி வீரர்களிடம் சொல்லிய ஷ்ரேயாஸ் அய்யர்.. பின்னணி என்ன?

CRICKET, IPL, DWAYNE BRAVO, YUVRAJ, YUVRAJ SINGH, IPL2022, CSK, ஐபிஎல், சென்னை சூப்பர் கிங்ஸ், பிராவோ, யுவராஜ் சிங்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்