"என்ன காப்பாத்துனதுக்கு தேங்க்ஸ்".. அஸ்வினுக்கு நன்றி சொன்ன தினேஷ் கார்த்திக்.. அட, இது தான் விஷயமா??.. வைரல் வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி 20 உலக கோப்பைத் தொடரில், தங்களின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக த்ரில் வெற்றி பெற்றிருந்தது இந்திய அணி.

Advertising
>
Advertising

Also Read | 32 வருசம் கழிச்சு ஆசிரியையை பார்த்த விமான பணிப்பெண்.. அடுத்த நிமிஷமே நடந்த மனம் உருகும் சம்பவம்!!.. எமோஷனல் வீடியோ!!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வருகிறது.

கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி அன்று சூப்பர் 12 சுற்று ஆரம்பமாகி இருந்தது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை சந்தித்து இருந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ரோஹித், பந்து வீச்சைத் தேர்வு செய்திருந்தார். அதன்படி ஆடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி அடிய இந்திய அணியும் ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் ஓரளவு தடுமாற்றம் கண்டது. பின்னர் ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி ஆகியோர் இணைந்து சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அது மட்டுமில்லாமல் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்ற இந்தியா அணி, பட்டையைக் கிளப்பி இருந்தது. இந்திய அணி வெற்றியுடன் டி20 உலகக்கோப்பை தொடரை தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், அஸ்வினிடம் தினேஷ் கார்த்திக் சொன்ன விஷயம் தொடர்பான வீடியோ ஒன்று, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. மெல்போர்னில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இந்திய அணி, தங்களின் இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணியை வரும் அக்டோபர் 27 ஆம் தேதியன்று சந்திக்க உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் அனைவரும் சிட்னி சென்றடைந்தனர்.

இது தொடர்பான வீடியோ ஒன்று, பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பேருந்தில் இருந்து வீரர்கள் வருவது, ரசிகர்களுடன் ஃபோட்டோ எடுத்துக் கொள்வது உள்ளிட்ட பல விஷயங்கள் அடங்கி உள்ளது. அதில், அஸ்வினிடம் பேசும் தினேஷ் கார்த்திக், "என்னை நேற்று காப்பாற்றியதற்கு நன்றி" என தெரிவிக்கிறார்.

இதற்கு காரணம், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் களமிறங்கி இருந்தார். கடைசி இரண்டு பந்துகளில் 2 ரன்கள் வேண்டுமென்ற நிலையில், அவர் அவுட்டாகி இருந்தார். இதன் பின்னர் வந்த அஸ்வின், வைடு பந்தை வாங்கியதுடன் கடைசி பந்தில் சிங்கிள் அடித்து வெற்றி பெறவும் வைத்திருந்தார்.

ஒரு வேளை கடைசி பந்தில் அஸ்வின் ரன் அடிக்காமல் போயிருந்தால் தினேஷ் கார்த்திக் மீது கூட விமர்சனம் எழுந்திருக்கும். இதனால், அதற்கு நன்றி சொல்லும் வகையில் தினேஷ் கார்த்திக் அஸ்வினிடம் அப்படி பேசி உள்ளார். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | மனைவியை உயிருடன் புதைத்த நபர்.. ஸ்மார்ட் வாட்ச்சில் இருந்து வந்த அவசர அழைப்பு.. அடுத்தடுத்து பரபரப்பு!!

CRICKET, DINESH KARTHIK, ASHWIN, T20 MATCH, தினேஷ் கார்த்திக், டி20 உலக கோப்பை கிரிக்கெட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்