கப்ப அடிக்கணும்! கேப்டனை கழட்டிவிட 'ஸ்கெட்ச்' போடும் அணி நிர்வாகம்?... எந்த டீம்னு பாருங்க!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரோஹித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணி, தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதனால் ஆரம்பமே கொல்கத்தா அணிக்கு தோல்வியாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் இயான் மார்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என பகிரங்க கருத்துக்கள் எழுந்துள்ளன. முன்னாள் வீரர்கள் பலரும் இதை வலியறுத்தி வருகின்றனர். முதல் போட்டியில் தோல்வி அடைந்து இருப்பதால் இந்த கருத்து மேலும் வலுவடைந்து உள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், '' இயான் மார்கனை விட தினேஷ் கார்த்திக்கு அனுபவம் அதிகம். அதனால் தினேஷ் கார்த்திக்கே கேப்டனாக தொடர வேண்டும். கொல்கத்தா அணிக்கு இருக்கும் ஒரே சாய்ஸ் தினேஷ் கார்த்திக் மட்டுமே,'' என வலியுறுத்தி இருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்