ஒரே ஒரு டெஸ்ட் மேட்ச் பேருல.. ஆஸ்திரேலிய ஜாம்பவானிடமே சவால் விட்ட தினேஷ் கார்த்திக்.. ஜெயிப்பாரா? மாட்டாரா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் போட்டி பற்றி தான் தற்போது கிரிக்கெட் உலகமே பேசிக் கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

                       Images are subject to © copyright to their respective owners.

Also Read | பூகம்பத்தில் சிக்கிய சிறுவனை காப்பாற்றிய வீரர்கள்.. நெகிழ்ச்சியில் சிறுவன் செய்த காரியம்.. கண்கலங்க வைக்கும் வீடியோ..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி ஜூன் மாதம் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில், இந்தியா முன்னேற வாய்ப்புள்ள சூழலில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அப்படி இருக்கையில், பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று (09.02.2023) ஆரம்பமானது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 177 ரன்களுக்கு  ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் சிராஜ் மற்றும் ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Images are subject to © copyright to their respective owners.

தொடர்ந்து, இந்திய அணி பேட்டிங் செய்த சூழலில், தொடக்க வீரர் கே.எல். ராகுல் முதல் நாளில் அவுட்டாகி இருந்தார். இதனையடுத்து, 2 ஆவது நாளிலும் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்த நிலையில், முதல் நாளின் போது வர்ணனையில் இருந்த இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மார்க் வாக் ஆகியோரிடையே நடந்த வாதம் தொடர்பான விஷயம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி சிறப்பாக ஆடி வரும் சூழலில், முதல் நாள் வர்ணனையில் ஈடுப்பட்டிருந்த தினேஷ் கார்த்திக், இந்த போட்டியில் இந்திய அணி ஒரே ஒரு இன்னிங்சில் மட்டும் தான் பேட்டிங் செய்யும் என நினைக்கிறேன் என்றும் கூறியிருந்தார். இதற்கு வர்ணனையில் பதில் பேசி இருந்த மார்க் வாக், நீங்கள் கூறியது நடக்கிறதா என்று பார்ப்போம் என்றும் சொல்லி இருந்தார். இதன் பின்னர் இது நிச்சயம் நடக்கும் என்று தினேஷ் கார்த்திக் கூற, நீங்கள் சொன்னதை குறித்து கொண்டேன் என்றும் அது ஒருவேளை நடக்கலாம், ஆனால் அது சாதாரண காரியம் இல்லை என்றும் மார்க் வாக் குறிப்பிடுகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இதனைத் தொடர்ந்து பேசும் தினேஷ் கார்த்திக், "நீங்கள் சொல்வது போல சுலபமில்லை தான். என்றாலும் ஆஸ்திரேலிய பேட்டர்களை சுருட்டுவதும் அந்த அளவு சிரமம் கிடையாது" என குறிப்பிட, "ஒரு அணி விளையாடியதை மட்டுமே வைத்து பிட்ச்சை கணிக்கக்கூடாது. இரு அணிகள் பேட்டிங் பார்த்தபின் தான் கணிக்க வேண்டும். இந்திய அணியை ஆஸ்திரேலியா எளிதில் விட்டு விடாது" என்றும் மார்க் வாக் அறிவுறுத்துகிறார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளின் டெஸ்ட் போட்டிக்கு இடையே வர்ணனையாளர்களும் மாறி மாறி சவால் விட்ட விஷயம், தற்போது அதிகம் கவனம் பெற்று வருகிறது.

Also Read | "எங்க இலைக்கு ஏன் பன்னீர் வைக்கல".. தகராறில் இறங்கிய மாப்பிள்ளை வீட்டினர்..? கல்யாண வீட்டில் நடந்த சோகம்..!

CRICKET, DINESH KARTHIK, MARK WAUGH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்