Video : "'தோனி' 'ஐபிஎல்' போட்டிலயும் 'retired' ஆகப் போறாரு??..." பரபரப்பை கிளப்பிய பல்வேறு 'யூகங்களுக்கு' மத்தியல்... 'தல' சொன்ன 'கூல்' பதில்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியுள்ளது.

இந்நிலையில், இந்த சீஸனின் தங்களது கடைசி லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை இன்று எதிர்கொகின்றது. எப்போதும் ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் சென்னை அணி, இந்த முறை தொடக்கத்தில் மோசமாக ஆடியது. பேட்டிங் வரிசை மிக மோசமாக இருந்த நிலையில், சிஎஸ்கே கேப்டன் தோனியும் சிறப்பாக ஆடவில்லை.

இதனையடுத்து சென்னை அணி மோதும் அனைத்து போட்டிகளின் முடிவுக்கு பின்னரும் கேப்டன் தோனி மற்ற அணி வீரர்களுடன் நீண்ட நேரம் உரையாடுவது, அவர்களுக்கு தனது ஜெர்சியை வழங்கி வருவது என்ற செயல்களில் தோனி ஈடுபட்டு வந்தார். ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வை அறிவித்துள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்தும் இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவதால் தான் தோனி இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்ற ஒரு கருத்து பரவி வந்தது.

இதனிடையே, இன்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அப்போது தோனியிடம், 'நீங்கள் மஞ்சள் நிற (சிஎஸ்கே அணிக்காக) ஆடுவது இது தான் கடைசி முறையா?' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி, 'நிச்சயமாக இல்லை' என தெரிவித்தார். 

 

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை யாரும் எதிர்பாராத வகையில் தோனி அறிவித்ததால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதே போல தற்போது, நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருடன் இருந்து தோனி விலகி விடுவார் என ரசிகர்கள் சற்று கலக்கத்தில் இருந்தனர். ஆனால், அனைத்து வதந்திகளுக்கு மத்தியில், தோனி கூறியுள்ள பதிலால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்